dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

காவிரி நீர் விவகாரம்: தமிழக அரசின் அவசர கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

By Admin
18/09/2026
60 views
காவிரி நீர் விவகாரம்: தமிழக அரசின் அவசர கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்துள்ள நிலையில், காவிரியில் உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி ஆற்று நீர் பங்கீடு விவகாரத்தில், தங்களுக்கு சேர வேண்டிய உரிய நீரை கர்நாடக அரசு உடனே திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. மேட்டூர் அணையில் தற்போது போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில், அடுத்த 30 நாட்களுக்கு மட்டுமே விவசாயத் தேவைகளுக்காக நீரை வழங்க முடியும் என்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான நிலையை கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் நீரை விகிதாச்சாரப்படி விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கோரியுள்ளது.

கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 23 வரை தினமும் 6,000 கன அடி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, நடப்பு பாசன ஆண்டில் ஜூலை 1 முதல் செப்டம்பர் 9 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட வேண்டிய நீர் பற்றாக்குறையைச் சரிசெய்ய வேண்டும் என்றும், பிலிகுண்டுலுவில் 16.01 டிஎம்சி நீரை விகிதாச்சார அடிப்படையில் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நதி, சுமார் 25 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பின் பாசனத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. மேட்டூர் அணை ஜூன் மாதத்தில் திறக்கப்படாததால் ஏற்கனவே குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பா சாகுபடிக்கான பணிகளும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதி திறக்கப்பட்ட மேட்டூர் அணையில் உள்ள சொற்ப நீர் இருப்பு, இன்னும் 25 முதல் 30 நாட்களுக்கு மட்டுமே விவசாயத் தேவைக்கு உதவும் சூழலில் உள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைக் கர்நாடக அரசு தொடர்ந்து மதிக்கத் தவறுவது, நீதிமன்ற அவமதிப்புச் செயலுக்குச் சமமானது என்று தமிழக அரசு தனது மனுவில் கடுமையாகப் பதிவு செய்துள்ளது. காவரி பாசனப் பகுதியை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கர்நாடக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி நீரைத் திறந்துவிட வேண்டுமென்பதே தற்போதைய அவசர கோரிக்கையாக உள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#காவிரிநீர்
#தமிழகஅரசு
#உச்சநீதிமன்றம்
#மேட்டூர்அணை
#விவசாயம்
#CauveryWater
#TamilNadu
#SupremeCourt
#Karnataka
#FarmersIssue
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications