dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடுவணிகம்

தமிழகத்தில் வணிக வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: பிரதிபலிப்பு நாடா விதிகளில் முக்கிய தளர்வு

By Admin
20/08/2026
85 views
தமிழகத்தில் வணிக வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: பிரதிபலிப்பு நாடா விதிகளில் முக்கிய தளர்வு

தமிழகத்தில் வணிக வாகனங்களுக்கான பிரதிபலிப்பு நாடா சான்றிதழ் கட்டாயமில்லை என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வணிக வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் (Fitness Certificate) பெறுவதற்கான நடைமுறைகளில் போக்குவரத்துத் துறை முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. வணிக வாகனங்கள் மற்றும் தனியார் பேருந்துகளில் கட்டாயம் ஒட்டப்பட வேண்டிய பிரதிபலிப்பு நாடாக்கள் (Reflective Tapes) தொடர்பாக இருந்த கடுமையான விதிமுறைகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, வாகனங்களில் ஏற்கனவே ஒட்டப்பட்டிருக்கும் பிரதிபலிப்பு நாடாக்கள் நல்ல நிலையில் இருந்தால், தகுதிச் சான்றிதழ் பெறும்போது அவற்றை மீண்டும் புதிதாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி, பிரதிபலிப்பு நாடாக்களின் தரம் மற்றும் பொருத்தத்தை ஆன்லைன் இணையதளம் வழியாகச் சரிபார்க்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, rtvsta.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது, தற்போது அந்த இணையதளம் செயல்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் (RTO) மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பைக் கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய மாற்றத்தின்படி, வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பிரதிபலிப்பு நாடாக்களில் ஏதேனும் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்திருந்தாலோ அல்லது அதன் பளபளப்புத்தன்மை குறைந்திருந்தாலோ, அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் மாற்றினால் போதுமானது. மாறாக, முழுமையாக நாடாக்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தமிழக அரசு இந்தத் தளர்வை அறிவித்துள்ளது. இது வாகன உரிமையாளர்களுக்குப் பெரிய நிம்மதியை அளிக்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

அகில இந்திய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ. அன்பழகன் இந்த முடிவை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், முன்பு வாகன உரிமையாளர்கள் புதிய நாடாக்களைப் பொருத்த சுமார் 3,500 ரூபாயும், சான்றிதழ் பெற கூடுதலாக 1,500 ரூபாயும் செலவு செய்து வந்தனர். மேலும், ஒவ்வொரு ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகளிடம் மட்டுமே சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. தற்போது இந்த தேவையற்ற செலவுகளும் நடைமுறைச் சிக்கல்களும் நீக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்துத் துறை சார்ந்த செயல்பாடுகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழகபோக்குவரத்து
#வணிகவாகனங்கள்
#செய்தி
#போக்குவரத்துவிதி
#தமிழகம்
#TNTransport
#CommercialVehicles
#ReflectiveTape
#TamilNaduNews
#RoadSafety
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications